SELANGOR

கூட்டரசு நெடுஞ்சாலையில் சட்டவிரோத விளம்பர பலகைகள் , எம்பிஎஸ்ஏ அப்புறப்படுத்தும்

ஷா ஆலம், ஜனவரி 9:

கூட்டரசு நெடுஞ்சாலை நெடுகிலும் பொருத்தப்பட்டுள்ள அனுமதி காலாவதியாகிவிட்ட அல்லது சட்டவிரோதமான விளம்பரப் பலகை மற்றும் பதாகைகளை ஷா ஆலம் நகராண்மைக் கழகம் இனி அப்புறப்படுத்தும்.
மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் பெறப்பட்ட பல்வேறு புகார்களை அடுத்து அமலாக்கப் பிரிவினர் இம்முடிவை எடுத்துள்ளதாக ஓர் அறிக்கையில் எம்பிஎஸ்ஏ கூறியது.

உண்மையாக இந்த விளம்பரப் பலகை மற்றும் பதாகைகள் மழைக் காலத்தில் சாலை பயனீட்டாளர்கள் மீது விழும் அபாயம் உள்ளது.
பொதுப்பணித் துறையிடமும் இது குறித்து புகார் செய்யப்பட்டாலும், இவ்விவகாரம் மீண்டும் ஊராட்சி மன்றத்தின் கவனத்திற்கே வருகிறது. ஏனெனில் இத்தகைய விளம்பரங்களுக்கு ஊராட்சி மன்றமே அனுமதி வழங்குகிறது என்றும் அது தெரிவித்தது.


Pengarang :