NATIONAL

கெஅடிலான், துன் மகாதீருக்கு பிளவு படாத ஆதரவு வழங்கும் – அன்வார்

 

கோலாலம்பூர், ஏப்.29-

துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பிளவு படாத ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

கடந்தாண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தில் அனுபமிக்க தலைவர் ஒருவரின் தலைமையில் ஆட்சி அமைந்ததால் மலேசியர்கள் நன்மை அடைந்துள்ளனர் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் கூறினார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது மக்கள் புதிய ஆட்சியிடம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதன் காரணமாக பெரும்பாலான புதிய அரசாங்கங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன என்றார் அவர்.

“ஆனால், நம் நாட்டில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியவர் அரசியல் அனுபவம் மிகுந்த துன் டாக்டர் மகாதீர் என்பதால் மக்கள் நன்மையடைந்துள்ளனர்” என்றார்.

புதிய அலையில் கப்பலை எவ்வாறு கட்டுப்பாட்டோடு செலுத்த வேண்டும் என்ற வழிமுறை அவருக்கு நன்கு தெரியும் என்றும் அன்வார் சொன்னார்.


Pengarang :