SELANGOR

தெங்கு பெர்மைய்சூரி செகிஞ்சான் வருகை

செகிஞ்சாங், மே 1-

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் இன்று இங்கு நட்பு முறையிலான வருகை மேற்கொண்டார்.

இங்குள்ள சுற்றுலா தலங்களை வலம் வருவதோடு இங்குள்ள மக்களுடன் கலந்துரையாடும் நோக்கத்தில் இந்த வருகையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

செகிஞ்சானின் வரலாறு குறித்த விளக்க உரையை செவி மெடுத்ததோடு உள்ளூர் மக்களுடன் சேர்ந்து இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் காலை சிற்றுண்டி உட்கொண்டு தனது பயணத்தை பெர்மைசூரி தொடக்கினார்.

சிலாங்கூர் பெர்மைசூரியை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் சுவீ லிம் வரவேற்றார்.


Pengarang :