NATIONAL

பேராசிரியர் கூ கேய் கிம் மறைவு: நாட்டின் வரலாற்று துறைக்கு பேரிழப்பு! – டாக்டர் மஸ்லீ மாலேக்

ஷா ஆலம், மே 28-

டான்ஸ்ரீ டாக்டர் கூ கேய் கிம்மின் மறைவானது கல்வி உலகிற்கு குறிப்பாக வரலாற்று துறைக்கு பெரும் இழப்பு என்று வர்ணிக்கப்படுகிறது.
நாட்டின் மேம்பாட்டிற்கும் வரலாற்று துறைக்கும் அன்னார் ஆற்றிய சேவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்று கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலேக் கூறினார்.

“நாட்டின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவராக விளங்கிய டான்ஸ்ரீ கூ கேய் கிம் (வயது 82) இன்று காலமானார். அவர் மறைந்த இந்த நாள், நாட்டின் கல்வி மற்றும் வரலாற்று துறைகளில் மிகவும் துயரமான நாளாகும்” என்றார் அவர்.
நாட்டின் மேம்பாட்டிற்கும் கல்வி துறைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளை வார்த்தைகளால் அளவிட முடியாது என்று தமது அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் மஸ்லீ குறிப்பிட்டார்.


Pengarang :