SELANGOR

மந்திரி பெசார் பதவியேற்று ஓராண்டு நிறைவு: சிலாங்கூரை வளப்படுத்துவேன் – அமிரூடின்

ஷா ஆலம், ஜூன் 20:

மக்கள் நலன் சார்ந்த திட்டம் வழியாக சிலாங்கூரை அமைதி மற்றும் செழுமையான சூழலில் தொடர்ந்து பீடு நடைபோடச் செய்ய மாநில அரசு உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நோக்கம் நிறைவேற, அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களின் ஒத்துழைப்போடு மாநிலத் தலைவர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் அவசியம் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“சிலாங்கூரின் 16ஆவது மந்திரி பெசாராக நான் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது” என்றார் அவர்
அனைவரும் ஒன்றிணைந்து வளமாக வாழ்வதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவோர் குறிப்பாக பொது மக்களை தாம் பெரிதும் வரவேற்பதாக அமிருடின் கூறினார்.

இதற்கு முன்பு சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக இருந்த டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மத்திய பொருளாதார விவகார அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமிரூடின் ஷாரி சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :