SELANGOR

ஸ்டேடியம் காஜாங்கில் சிறார்களுக்கான நவீன பம்பரப் போட்டி

ஷா ஆலம், ஜூன் 27-

12 வயது மற்றும் அதற்கும் குறைவான சிறார்கள் பங்கேற்கும் நவீன பம்பரம் விடும் போட்டியான ‘பேய்பிலேட் பெர்ஸ்ட் சவால்’ வரும் ஜூன் 29, 30 ஆம் தேதிகளில் காஜாங் அரங்கில் நடைபெறும். இப்போட்டியைக் காண அதிகமானோர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

360 ஸ்மார்ட் சிலாங்கூர் பயணத் திட்டத்தின் விவேக நடமாடும் நூலக இயக்கத்தை முன்னிட்டு இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சிலாங்கூர் பொது நூலக கழகம் கூறியது.இரு தினங்களுக்கு நடைபெறும் இப்போட்டி காலை 11 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நீடிக்கும் என்றும் தோல்வி கண்ட குழு போட்டியில் இருந்து விலகும் நாக் அவுட் பாணி போட்டியாகும் என்றும் கழகத்தின் அறிக்கை தெரிவித்தது.

“இப்போட்டியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டியாளர்கள் தங்கள் பேய்பிலேட்டைக் கொண்டு வர வேண்டும். கடந்த மாதம் 28ஆம் தேதி நடந்த போட்டிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது” என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.


Pengarang :