SELANGOR

வர்த்தக தலைமைத்துவ விருது -பிகேஎன்எஸ் பெற்றது

ஷா ஆலாம், ஜூலை 9:

சொத்துடமை துறையில் தொடர்ந்து படைத்து வரும் சாதனைகளுக்காக சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகம் (பிகேஎன்எஸ்) 2018-2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த வர்த்தக தலைமைத்துவ விருதைப் பெற்றது.

கடந்த ஜூன் 27 ஆம் தேதி தலைநகர், மாஜிஸ்டிக் ஹோட்டலில் நடைபெற்ற தெ பிராண்ட்லோர்ரியேட் விருதளிப்பு விழாவில் பிகேஎன்எஸ்க்கு இவ்விருதை உலக வர்த்தக பெயர் அறவாரயம் ( ஏபிபி எஃப்) வழங்கியது.

பிகேஎன்எஸ் இவ்விருதைத் தொடர்ந்து இரண்டாம் தடவையாகப் பெற்றுள்ளது என்று அதன் தலைமை செயல்முறை அதிகாரி நோரித்தா முகமது சாலே தெரிவித்தார்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட பிகேஎன்எஸ் சொத்துடமை தொழில்துறையில் இன்னும் துடிப்புடன் செயல்படுவதை இந்த அங்கீகாரம் புலப்படுத்துகிறது” என்றார் அவர்.

 


Pengarang :