SELANGORSUKANKINI

பிடிஆர்எம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிலாங்கூர் சமநிலைக் கண்டது

கோலாலம்பூர், ஆக.19-

33 முறை மலேசிய கிண்ணத்தை வென்றுள்ள சிலாங்கூர், ஷா ஆலம் அரங்கத்தில் ஆடிய மூன்றாவது ஆட்டத்தில் அரச மலேசிய போலீஸ் குழுவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடிய ஆட்டத்தில் 1-1 என்று சமநிலை கண்டது.

இந்த முடிவின் காரணமாக, இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களில் 5 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள சிலாங்கூர் அணி,, புள்ளிப் பட்டியலில் பெல்டா யுனைடெட் குழுவை 3-1 என வீழ்த்திய மலாக்கா மாநிலத்திற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

டி பிரிவில் காலிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெறும் இரண்டு அணிகளுக்கான போட்டியில் இ. இளங்கோவன் தலைமையிலான அரச மலேசிய போலீஸ் அணி சிலாங்கூருடனான ஆட்டத்தில் சமநிலை கண்டதன் மூலம் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று சிலாங்கூருக்கும் மலாக்காவிற்கும் தொடர்ந்து மிரட்டலாகத் திகழ்ந்து வருகிறது.
சிலாங்கூர் அணி அதன் முதல் கோலை சந்திரோ டி சில்வா மூலம் புகுத்திய 7 நிமிடத்திற்குப் பின்னர் ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் அரச மலேசிய போலீஸ் படையின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் தலையால் முட்டிப் புகுத்திய கோலை பிடிஆர்எம் ஆட்டக்காரர்கள் அர்க்ஸிம் ரெட்ஸோவிக் ஆட்சேபித்தார்.


Pengarang :