NATIONAL

உதவித் தொகை பெறுநரின் தகவல் தரவு மறுசீரமைக்கப்படும்! – விவசாயத் துறை அமைச்சு

கோலாலம்பூர், டிச.4-

தேசிய நெல் விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் விவசாயி ஊக்குவிப்பு மற்றும் உதவித் தொகை பெறுநர் தரவு சீரமைப்பு பணியை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அமைச்சு மேற்கொண்டு வருகிறது..
இந்த உதவி சம்பந்தப்பட்ட தரப்பைச் சென்றடைவதை இந்நடவடிக்கை உறுதி செய்யும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாஹுடின் ஆயுப் கூறினார்.

இதன் மூலம் அடுத்தாண்டுக்கான உதவித் தொகை பெறுநரின் தகவல் தரவு மேலும் துல்லிமாக இருப்பதோடு அத்தகவல்கள் ஏதும் கசியாது எனவும் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

“தகவல் தரவு சீரமைப்பு பணியானது ஓர் எளிதான காரியமில்லை. ஏனெனில் இது விவசாயிகளோடு கிராம வாசிகளையும் உட்படுத்தியதாகும். அவர்களிடம் நாம் கடுமையாக நடந்துக் கொள்ள முடியாது” என்று அவர் விவரித்தார்.


Pengarang :