Dato’ Abdul Rashid Ashari
SELANGOR

சுற்றுலா துறையை மேம்படுத்த அனைத்துலக சுற்றுலா கண்காட்சிகளில் சிலாங்கூர் பங்கேற்கும்!

ஷா ஆலம், பிப்.13-

மாநில சுற்றுலா துறையை மேம்படுத்த ஆண்டு முழுவதும் அனைத்துலக சுற்றுலா கண்காட்சிகளில் சிலாங்கூர் பங்கேற்கும்.
எட்டு மில்லியன் சுற்றுப் பயணிகள் இலக்கை அடைவதற்கு இதுவே சரியான தடமாகும் என்று சுற்றுலா துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அஸ்ஹாரி கூறினார்.

“பெர்லின், துபாய், மயாமி மற்றும் தோக்யோ ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கும் கண்காட்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறோம். இது போன்ற கண்காட்சிகளில் சுற்றுலா துறையினர் அதிகம் பங்கேற்பர் என்பதால் இது போன்ற சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது” என்றார் அவர்.

“சுற்றுலா துறை நலவுற்று வரும் வேளையில், இது போன்ற கண்காட்சிகள் மாநிலத்தின் சுற்றுலா துறைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :