SELANGOR

உணவு விநியோகச் சேவையை விரிவுபடுத்துவீர்!

ஷா ஆலம், ஏப்.9-

பிகேபி காலக் கட்டத்தில் உணவுகள் விநியோகிக்கும் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதர பொருட்களையும் விநியோகிக்க வேண்டும் என்று தொழில்முனைவர் மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில் கோரிக்கை விடுத்தார். கோவிட்-19 தொற்று பரவலைத் தடுப்பதற்காக மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், விநியோகச் சேவையை விரிவுபடுத்துவது அவசியம் என்றார் அவர்.

உணவுகளை விநியோகிக்கும் கிராப்ஃபூட். ஃபூட்பண்டா போன்ற நிறுவனங்கள் உணவு சார்ந்த அடிப்படை பொருட்களையும் விநியோகிக்க முன் வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதேவேளையில், அன்றாட அத்தியாவசியப் பொருட்களும் இணையம் வாயிலாக அல்லது வாகனத்தில் இருந்தபடியே பொருட்கள் வாங்கும் நடைமுறைகளை விரிவுப்படுத்தினால். மக்களின் நெரிசலைக் குறைக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :