SELANGOR

மதுபானங்களை விற்பனை செய்யும் வளாகங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும்- குணராஜ் பரிந்துரை

ஷா ஆலம், ஜூன் 3:

ஊராட்சி மன்றங்கள் மதுபானங்களை விற்பனை செய்யும் வளாகங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே திறந்து இருக்க புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என செந்தோசா சட்ட மன்ற குணராஜ் ஜோர்ஜ் வேண்டுகோள் விடுத்தார். இதன் வழி 21 வயதுக்கு உட்பட்ட இளையோர்கள் மதுபானங்களை வாங்குவதை தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

” இந்த மதுபானங்களை குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப் படுகிறது. 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த வளாகத்திற்கு நுழைய அனுமதிக்கக் கூடாது. கடந்த 2009-இல் நான் செலாயாங் நகராண்மை கழக உறுப்பினராக இருந்த போது இதே பரிந்துரையை அரசாங்கத்திடம் வைத்தேன். ஆனாலும், வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கருத்தில் கொண்டு எனது பரிந்துரை நிராகரிக்கப்பட்டது,” என குணராஜ் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


Pengarang :