NATIONAL

நாட்டில் இன்று 3,631 கோவிட்-19 சம்பவங்கள்- 18 பேர் உயிரிழப்பு

ஷா ஆலம், ஜன 22- நாட்டில் இன்று 3,631 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாடு முழுவதும்  அந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176,180ஆக உயர்வு கண்டுள்ளது.

பாதிப்பு தீவிரமாக உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 42,814 ஆகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று 2,554 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய வேளையில் 18 பேர் இந்நோய்க்கு பலியானதாக அவர் சொன்னார்.


Pengarang :