NATIONAL

பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்கு 21 நாட்களை எஸ்பிஆர் அனுமதிக்க வேண்டும்

கோலா லம்பூர், மார்ச் 7:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்கு 21 நாட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலின் பரிந்துரையை ஆதரிப்பதாக ஜசெகவின் பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் தோனி புவா கூறினார். இந்த பரிந்துரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

”  நாம் 21 நாட்கள் வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறோம். இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தகவல்களை பரப்பி சிறந்த முடிவை எடுக்க முடியும்,” என்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

#தமிழ் பிரியன்


Pengarang :