புத்ராஜெயா, ஏப்ரல் 03:
செலாமா காவல்நிலையத்தின் தடுப்புக்காவலில் ஒருவர் மரணமுற்ற சம்பவம் குறித்து தனித்தனியே விசாரிக்கப்படும் என சுயட்சை விசாரணை அமலாக்க வாரியம் தெரிவித்தது.
அச்சம்பவம் குறித்த விசாரணை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முழுமையான விசாரணைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதன் தலைவர் டத்தோ ஏ அஜிஸ் ஏ இராஹிம் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணை தனித்தனியே மேற்கொள்ளப்படுவதாகவும் கூறிய அவர் இவ்விசாரணை செலாமா மாவட்ட காவல்நிலைய தலைவர் சூப்ரிதெண்டர் லூ லியான் லாய் ஊடகங்களுக்கு தெரிவித்தது போல் நடைபெறவில்லை என்றார்.
தொடர்ந்து கூறிய அவர் இவ்விசாரணை வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் எந்தவொரு ஒளிவுமறைவும் இன்றி மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அதேவேளையில்,நேர்த்தியான மற்றும் நேர்மையான விசாரணையை கண்காணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறிய அவர் தங்களின் ஏஜென்சி இவ்விவகாரத்தில் வெளிப்படையான போக்கினை கடைபிடிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் கடந்த மார்ச் 17ஆம் தேதி செலாமா காவல்நிலையத்தில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.