SELANGOR

சுதந்திர தினத்தை முன்னிட்டு சாலைகள் மூடப்படும் எம்.பி.எஸ்.எ தகவல் !!

ஷா ஆலாம்,ஆக13:

நாட்டின் 61வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஷா ஆலாம் வட்டாரத்தின் முக்கிய சாலைகளை வரும் 31 ஆம் தேதி மூடவிருப்பதாக ஷா ஆலாம் மாநகர மன்றம் எம்.பி.எஸ்.எ தெரிவித்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டி நடைபெறும் ஒத்திகை மற்றும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு வழி செய்யும் வகையில் பெர்சியாரான் பண்டாராயா சாலை வரும் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அஃது கூறியது.

பொது மக்கள் எம்.பி.எஸ்.எ வெளியிடும் அறிவிப்புகளை தொடர்ந்து பின் பற்றுமாறும் கேட்டு கொண்டது.

நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் நாம் அனைவரும் தேச உணர்வை தொடர்ந்து வலுப்படுத்திட வேண்டும் என்றும் அஃது கேட்டுக் கொண்டது.


Pengarang :