அம்பாங் , ஆகஸ்ட் 22:
வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஸூரைடா கமாரூடின், அம்பாங் நாடாளுமன்ற அளவிலான தேசிய கொடியை பறக்க விடும் பிரச்சார இயக்கத்தை ஸ்பேக்டிரம் பேரங்காடியில் நேற்று தொடக்கி வைத்தார். அம்பாங் நாடாளுமன்ற தொகுதியின் அரசாங்க இலாகாகளின் பிரதிநிதிகள், சமுதாய தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களுக்கு தேசிய கொடிகளை வழங்கினார்.
தனது உரையில், மலேசிய நாட்டின் குடிமக்கள் தேசிய தினத்தை முன்னிட்டு அனைவரும் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.