SELANGOR

மந்திரி பெசார்: பாஸ் மற்றும் அம்னோ இணைவதே சிறந்தது !!!

ஷா ஆலம், ஆகஸ்ட் 20:

அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் கண்ணோட்டத்தில் பாஸ் கட்சியும் அம்னோவும் அதிகாரப்பூர்வமாக  இணைந்து விடுமாறு கெஅடிலான் கட்சியின் மத்திய தலைமை மன்ற உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியினர் எதிர் வரும் ஸ்ரீ செத்தியா மற்றும் பாலாக்கோங் இடைத்தேர்தல்களில் கடுமையாக உழைத்து வெற்றிக்கனியை தக்கவைத்துக் கொள்ளும் என்று சூளுரைத்தார்.

”  தற்போதைய சூழ்நிலையில் இரண்டு தரப்பினரும் இணைந்து ஒரு அணியில் இருப்பதே நல்லது. தேர்தலில் பிரச்சாரம் செய்வது சம்பந்தப் பட்ட கட்சியினரின் முடிவாகும். நாங்கள் நியாயமான மற்றும் நீதியான முறையில் செயல்பட்டு கடுமையான போட்டியை கொடுப்போம்,” என்று சிலாங்கூர் மாநில பொதுப்பணித்துறையின் தேசிய கொடியை பறக்க விடும் பிரச்சார இயக்கத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அமிரூடின் பேசினார். இந்த நிகழ்ச்சி சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Pengarang :