NATIONAL

விவசாயிகளுக்கு உதவி நிதி மற்றும் மான்யம் தொடரும்

கோலா லம்பூர், நவம்பர் 20:

விவசாய அமைச்சு குறைவான ஒதுக்கீடு வழங்கி இருந்தாலும்  விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவி நிதி மற்றும் மான்யங்கள் கிடைக்கும் என்று விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சர் டத்தோ சலாவுதீன் அயோப் உறுதி கூறினார். தனது அமைச்சின் வியூகங்களை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப் பட்ட விவசாயிகளுக்கு ஒதுக்கீடுகள் சென்று சேரும் என்று விவரித்தார்.

மேலும், மான்யங்கள் இலக்கை நோக்கி செல்ல மறுஆய்வு செய்து வருவதாக  நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2019-இன் வரவு செலவுத் திட்டத்தை ஒட்டி பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். பயிர் செய்யாத விவசாயிகள் இதிலிருந்து விடுவிக்கப் படுவார்கள். இது மட்டுமில்லாமல், மேம்பாட்டு திட்டங்களுக்காக தங்களின் விவசாய நிலங்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கும் உதவி நிதி மற்றும் மான்யம் வழங்கப்படாது என்று சலாவுதீன் அயோப் கூறினார்.

தகவல்: பெர்னாமா


Pengarang :