SELANGOR

மிகவும் அதிகமான முதலீட்டை பதிவுசெய்து சிலாங்கூர் வரலாறு படைத்தது!

பாங்கி, பிப்.15:

சிலாங்கூர் மாநிலம் கடந்த 2018 ஆண்டு 12 பில்லியன் வெள்ளி முதலீட்டை பதிவு செய்துள்ளதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

“இந்த எண்ணிக்கையானது கடந்த 2017ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதலீட்டு தொகையான 5.29 பில்லியன் வெள்ளியுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகமாகும்” என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“அதிகாரப்பூர்வமற்ற ஒரு சந்திப்பின் போது, கடந்த டிசம்பர் மாதம் வரையில் மாநிலம் 12 பில்லியன் வெள்ளி முதலீட்டை பெற்றுள்ளது என்றும் இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு உயர்வாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது” என்றார் அவர்.

அதேவேளையில், இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அரசு பணியாளர் மேலும் விழிப்புடனும் துரிதமாகவும் உழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :