NATIONAL

இளம் பெண்களை மேம்படுத்துவதில் கெஅடிலான் முன்னோடியாக திகழ வேண்டும்

ஷா ஆலம், மார்ச் 8-

துணிச்சல்மிக்க மகளிர் தலைவரை உருவாக்கும் நடவடிக்கையில் கெ அடிலான் கட்சி முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த இளம் பெண்கள் அனைத்து நிலைகளிலும், ஆண்களுக்கு இணையாக சிறந்து விளங்குவதை உறுதி செய்ய வேண்டும் கட்சியின் ஸ்ரீகண்டி தலைவர் நூராய்னி ஹாஸிபா ஷாஃபி கூறினார்.

சமுதாயம் மற்றும் நாட்டின் மேம்பாட்டில் அதிகளவிலான இளம் பெண்கள் பங்காற்றுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.

இந்த கொள்கை மற்றும் நம்பிக்கை, இவ்வாண்டு மகளிர் தின கருப்பொருளான “சரிசமமாக சிந்திப்போம், திறமையால் மேம்படுவோம், புத்தாக்கத்தோடு உருமாறுவோம்” என்பதற்கேற்ப அமைந்துள்ளன என்றார் அவர்.


Pengarang :