NATIONALRENCANA PILIHANSELANGOR

ஊராட்சி மன்ற புதிய எல்லை சீரமைப்பு பரிந்துரை

ஷா ஆலம், ஜூலை 31-

சிலாங்கூர் ஊராட்சி மன்ற மற்றும் நில மற்றும் சுரங்க அலுவலகத்திற்கான சில புதிய எல்லைகளை மறு சீரமைப்பு செய்யும்படி மாநில அரசாங்கம் தேர்தல் ஆணையத்திடம் (எஸ்பிஆர்) பரிந்துரை செய்தது.

இம்மாநிலத்தில் சில பகுதிகள் அல்லது தொகுதிகள் சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வெளியே இருப்பது இதற்கு காரணம் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மாநில அரசாங்கம் ஊராட்சி மன்ற எல்லையை 1976ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற சட்டப் பிரிவு 43 இன் கீழ் பெயர் மாற்றம் மற்றும் எல்லை மாற்றத்திற்கான தரம் போன்றவற்றை உள்ளடக்கி ஊராட்சி மன்ற எல்லைப் பகுதியை நிர்ணயிக்க அனுமதிக்கப்படும் என்றார்.

இந்த விவகாரம் குறித்து எஸ்பி ஆர் தலைவரை அண்மையில்ல் நான் சந்தித்தபோது கூறினேன். சில புதிய எல்லைகளைப் பரிந்துரை செய்யும்படி அவர்கள் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர் என்று இங்கு சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்ட கேள்வி நேரத்தின்போது விவரித்தார்.


Pengarang :