ஷா ஆலம், ஆக.12-
கூட்டரசு சட்டமைப்பை உட்படுத்திய சிலாங்கூர் மாநில இஸ்லாமிய நிர்வாக சட்டமைப்பு மீது விரிவான விவாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து மாநில தலைமைத்துவம் மற்றும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த மத்திய நிலையிலான தலைவர்களுடன் விவாதிக்கப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் ஷாவும் இச்சடப்பிரிவு குறித்து மீண்டும் ஆராய்ந்து வருகிறார் என்றும் அவர் சொன்னார்.
அனைத்து தரப்புகளுடன் விவாதம் நடத்திய பின்னர், மாநில சுல்தானிடம் இவ்விவகாரம் குறித்து மீண்டும் கலந்தாலோசிக்கப் போவதாக அமிருடின் கூறினார்.