கோலாலம்பூர், ஆக.28-
அரசாங்கம் தற்போது வரையும் கொள்கை யாவும் மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்காகவே என்று புறநகர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா முகமது ஹருண் கூறினார்.
எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை முறை இன்றைய தலைமுறையினர் வகுக்கும் கொள்கையைக் கொண்டே அமையும் என்று அவர் விவரித்தார்.
“அவர்களின் எதிர்காலம் நமது கைகளில் உள்ளது. அரசாங்கம் இன்று வகுக்கும் கொள்கைகள் யாவும் இளையோரின் எதிர்காலத்திற்காகவே” என்றார்.
“ அவர்கள்தான் இந்நாட்டின் வருங்கால வாரிசுகளாவர்.” என்று 2019 கூட்டரசு பிரதேச மெர்டேக்கா குழு திட்டத்தைத் தொடக்கிவைத்து ஆற்றிய உரையின் போது ரீனா கூறினார்.