RENCANA PILIHANSELANGOR

இலவச பேருந்து சேவையை அந்நிய நாட்டவர்கள் ஆக்கிரமிக்கவில்லை!

ஷா ஆலம், நவம்பர் 4:

பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையை அந்நிய நாட்டவர்களில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இச்சலுகையை அந்நிய நாட்டவர்களே ஆக்கிரமிக்கின்றனர் என்ற புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்விவரம் கிடைத்தாக ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து மற்றும் புதுக்கிராம மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உரறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 9 விழுக்காடு அந்நிய நாட்டவர்கள் மட்டுமே இச்சேவையை பயன்படுத்தி வருவதாகத் தெரியவந்தது என்றார் அவர்.
அதேவேளையில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 12 விழுக்காட்டு அந்நிய பிரஜைகள் மட்டுமே பயன்படுத்துவதாக புள்ளி விவரம் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்/


Pengarang :