NATIONAL

பெட்ரோல் உதவித் தொகை பெறுநர் பட்டியல் 2020 பிப்ரவரியில் வெளியிடப்படும்

கோலாலம்பூர், டிச.19-

பெட்ரோல் உதவித்தொகைத் திட்டத்திற்குத் (பிஎஸ்பி) தகுதி பெறுபவர்களின் இறுதி பெயர் பட்டியல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படலாம் என்று உள்நாடு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை துணையமைச்சர் சோங் சியெங் ஜென் கூறினார்.

இந்தப் பட்டியலுக்கான தரவுகள் பூர்த்தியான பின்னர், இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் வெளியிடும் என்றார் அவர்.
“வாழ்க்கைச் செலவின உதவித் தொகை திட்டப் பட்டியலுடன் போக்குவரத்து துறையின் வாகன உரிமையாளர் பட்டியலைச் சரிபார்த்த பின்னர் இந்த உதவித் திட்டத்திற்கு மொத்தம் 2.9 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர்” என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இதனிடையே, பிஎஸ்பி பெறத் தகுதி பெற்றுள்ள 346,491 பேர் தங்கள் வங்கி விவரங்களைச் சரிப்பார்த்துக் கொள்ளலாம். அதேவேளையில், இத்திட்டத்திற்குத் தகுதி பெறத் தவறிய 480,317 பேர் பிஎஸ்பி வலைத்தளத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று மேலைவையில் வாய்மொழியாக கேட்கப்பட்ட கேள்வி பதிலளிக்கையில் சோங் விவரித்தார்.


Pengarang :