SELANGOR

சுகாதார, சமூகநல விழாவில் புற்று நோய் விழிப்புணர்வு இயக்கம்

ஷா ஆலாம், பிப். 5-

பிப்ரவரி 29ஆம் தேதி கிள்ளான், தாமான் ஸ்ரீ அண்டாலாஸ், தாமான் ராக்யாட்டில் நடைபெறும் சுகாதார, சமூக நல, மகளிர் விழாவில் புற்று நோய் விழிப்புணர்வு இயக்கம் முக்கிய அம்சமாக இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விழா புற்று நோய் தொடர்பான உடல் நிலை மற்றும் மனநிலை ஆரோக்கியம் தொடர்பான வழிகாட்டியை ஏற்படுத்தும் என்று சுகாதார துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தெரிவித்தார்.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் இருப்பதை ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்து கொள்ள இலவச மார்பக புற்று நோய் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சித்தி மரியா கூறினார். “அதே வேளையில், மாநில அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் இலவச மருத்துவ சோதனையை ஊக்குவிப்பதற்கான ஓர் அடுத்தளமாகவும் இந்த விழா அமையும்” என்று 2020 புற்று நோய் தினத்தையொட்டி முகநூலில் வெளியிட்ட செய்தியில் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :