ஷா ஆலம், பிப்.11-
சிலாங்கூர் நீர் நிர்வாகம் (ஆயர் சிலாங்கூர்) உயர் நெறிமிக்க நிறுவனமாகத் திகழ்வதற்காக ஊழலற்ற நிறுவனமாக செயல்பட உறுதி மொழி எடுத்துக் கொண்டது என்று அதன் நிறுவனத் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலேம் மாட் சோம் கூறினார்.
குழுவாகச் செயல்படுவது, நேர்மையாக, நிபுணத்துவமிக்க சிறந்த சேவை வழங்கும் கொள்கை வழி இந்தக் கடப்பாட்டை நிறைவேற்றப் போவதாக அவர் தெரிவித்தார்.
“பரிசு பொருள் அல்லாத கொள்கை, தகவல் தெரிவிப்பவர், கருத்து வேற்றுமை வெளிப்படுத்துதல், நேர்மையுடன் செயல்படும் ஒப்பந்தம் போன்றவை தொடக்கக் கட்டமாக மேற்கொள்ளவிருக்கும் சில வழிகாட்டி நடவடிக்கைகளாகும்” என்றார் அவர்.
“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சமூகக் கல்வி பிரிவு இயக்குநர் ரஸிம் முகமது நோர் முன்னிலையில் இந்த உறுதி மொழி எடுக்கப்பட்டது” என்று அவர் சொன்னார்.