புத்ராஜெயா, மார்ச் 2:
டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் இன்று நாட்டின் எட்டாவது பிரதமர் பணியை தொடங்கினார். இன்று காலை எட்டு மணிக்கு பெர்டானா புத்ராவில் நுழைந்து பிரதமர் அலுவலகத்தில் தனது பணியை அதிகாரப் பூர்வமாக ஆரம்பித்தார்.
நாட்டின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ முகமட் ஸூக்கி அலி, பிரதமரை வரவேற்று பிரதமர் அலுவலம் அமைந்துள்ள ஐந்தாவது மாடிக்கு அழைத்துச் சென்றார்.