PBTSELANGOR

நெகிழிப் பைகளுக்குக் கட்டணம்: பெட்டாலிங் ஜெயாவில் வணிகர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை

ஷா ஆலம், மார்ச் 2-

நெகிழிப் பைகளுக்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) கட்டணம் விதிப்பதற்கு எதிராக வணிகர்கள் எவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று அதன் டத்தோ பண்டார் கூறினார்.
ஊராட்சி மன்றத்தின் வாயிலாக நெகிழிப் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதற்காக இதுவரை பெரிய அளவில் வர்த்தகம் புரியும் 40 வணிகர்கள் எம்பிபிஜேவில் பதிந்து கொண்டிருப்பதாக டத்தோ பண்டார் டத்தோ முகமது சாயுத்தி பாக்கார் தெரிவித்தார்.

“வணிகர்களிடமிருந்து ஒவ்வொரு காலாண்டில் இந்தக் கட்டணத்தை வசூலிக்க எம்பிபிஜே முடிவு செய்துள்ளது” என்று கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற எம்பிபிஜே முழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாநில அரசாங்கம் நெகிழிப் பைகளுக்கு 20 காசு வசூலிக்கும் பொறுப்பை ஊராட்சி மன்றத்திடம் வழங்கியது.


Pengarang :