NATIONALSELANGOR

சிலாங்கூர் மாநில சட்டசபை திங்கட்கிழமை திட்டமிட்டபடி நடைபெறும் !!!

போர்ட் கிள்ளான், மார்ச் 12:

சிலாங்கூர் மாநில சட்டசபை கூட்டத் தொடர் திட்டமிட்டபடி மார்ச் 16-இல் நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் சட்ட மன்ற கூட்டம் தொடர்ந்து செயல்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சட்ட மன்ற நுழைவாயிலில் அனைவருக்கும்  சுகாதார கட்டுபாடு மற்றும் உடல் வெப்பநிலை சோதனை நடத்தப்படும் என்று அமிருடின் ஷாரி கூறினார்.

” சட்டமன்றத்தில் நுழையும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்,” என்று மேற்கு துறைமுக தளவாட மையத்திற்கு வருகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிருடின் ஷாரி தெரிவித்தார்.


Pengarang :