Kakitangan perubahan melakukan saringan pengesanan Covid-19 ke atas jemaah tabligh di Masjid Seri Petaling Kuala Lumpur. Foto Facebook
NATIONALRENCANA PILIHAN

நாட்டில் முப்பத்தொன்பது புதிய கொவிட் -19 வழக்குகள்!!!

கோலா லம்பூர், மார்ச் 14:

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் நிலவரப்படி நாட்டில் முப்பத்தொன்பது புதிய கொவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இது ஒட்டுமொத்த வழக்குகளை 197- ஆகக் கொண்டுவந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டத்துக் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

38 நோயாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்றும், மீதம் இருப்போர் நெருங்கிய தொடர்பு மூலம் கொரொனாவைரஸ் பாதிப்புக்கு ஆளாகினர் என்றும் அவர் கூறினார்.

நான்கு நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

“முதல் அலையில் உள்ள அனைத்து வழக்குகளும் மீண்டு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :