Dato’ Seri Amirudin Shari mengumumkan Pakej Rangsangan Ekonomi Selangor 2.0 di Kediaman Rasmi Dato’ Menteri Besar, Shah Alam pada 1 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

ரிம.272 மில்லியன் மதிப்பிலான 2ஆம் கட்ட பொருளாதார நல திட்டம் – மந்திரி பெசார்

ஷா ஆலம், ஏப்.1-

கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கத்தை குறைக்க சிலாங்கூர் அரசு இன்று 272 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இரண்டாம் கட்ட பொருளாதார நல திட்டத்தை அறிவித்தது.
127.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதல் கட்ட பொருளாதார நில திட்டத்தை மாநில அரசு கடந்த மார்ச் 20ஆம் தேதி அறிவித்தது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“இதன் வழி இதுவரை மொத்தம் 400 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருளாதார நலத் திட்டங்களை சிலாங்கூர் அரசாங்கம் அறிவித்துள்ளது” என்றார் அவர்.
இறைவன் அருளால், அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் கடந்த காலச் சவால்களை நாம் சமாளித்தது போல், நடப்புச் சவால்களை எதிர் கொள்ள உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :