ஷா ஆலம், ஏப்.1-
சிலாங்கூர் கோவிட்-19 சிறப்பு உதவி நிதிக்கு உதவ மாநில அரசாங்க தலைமைத்துவம் ஊதிய பிடித்தம் சம்மதம் தெரிவித்துள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷார் கூறினார். இதில் மந்திரி பெசார், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை நிறுவனங்கள் ஆகியவற்றின் மொத்த ஊதியமான 8.07 மில்லியன் ரிங்கிட் அடங்கும் என்று அவர் சொன்னார்.
மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் ஊதியத்தில் 50 %, சட்டமன்ற உறுப்பினர் 30 %, அரசு தொடர்பு நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள் 30 % பிடித்தம் செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, கிரேட் 44 முதல் 54 வரையிலான அரசாங்க ஊழியர்கள் கோவிட்-19 உதவி நிதிக்கு 50 ரிங்கிட் முதல் 100 ரிங்கிட் வரை பங்களிக்க ஊக்குவிப்படுவதாக சிலாங்கூர் 2ஆம் கட்ட பொருளாதார நில அறிவித்த பின்னர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமிருடின் கூறினார்.