Bazar Ramadan PKNS, Shah Alam
NATIONALRENCANA PILIHANSELANGOR

இணையச் சந்தை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்! – மந்திரி பெசார்

ஷா ஆலம், ஏப்.8-

குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இணையச் சந்தையை அமல்படுத்துவது குறித்து விரைவில் மாநில அரசு அறிவிக்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்று பரவலை அடுத்து சந்தைகளுக்குத் தடைவிதிக்கப் பட்டுள்ளதால், இணைய அழைப்புகளை கையாளும் நிறுவனம் ஒன்றுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த விவகாரத்தில் உள்ள பொருளாதாரத் திறன் மற்றும் சமையல்காரர் உட்பட சில நுட்ப அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் இதை ஊராட்சி தரப்பு நிர்வகிக்கும்” என்றார் அவர்.
புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டில் மொத்தம் 15,600 அங்காடி கடைக்காரர்கள் ரமலான் சந்தைகளில் ஈடுபட்டிரிந்தனர். எனவே, இணையச்  சந்தை அமல்படுத்தப்படாவில் நிச்சயம் அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வீடியோ மூலம் பெர்னாமா வானொலிக்கு அளித்த பேட்டியில் அமிருடின் தெரிவித்தார்.


Pengarang :