ஷா ஆலம், ஏப்ரல் 25:
நாடு தழுவிய அளவிலும் மாநில ரீதியிலும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் இன்னும் பலர் பரிசோதனையை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர் என டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்லி அமாட் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) தலைவரான ஸூல்கிப்லி பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்த வைரஸ் நோய் மிகவும் சுலபமாக மற்றவர்களுக்கு பரவும் என்று அறிவுறுத்தினார்.
” கோவிட்-19 புதிய சம்பவங்கள் குறைந்துள்ளது என்று நாம் மகிழ்ச்சி அடைந்தாலும், வெளியே பலர் இன்னும் நோய் பரிசோதனை செய்யாமல் உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.