ஷா ஆலம், மே 6:
நேற்று நண்பகல் 12 மணி வரை பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் கோம்பாக் ஆகியவை தொடர்ந்து சிவப்பு மண்டலங்களாக இருந்து வருகின்றன என சுகாதார அமைச்சின் தேசிய நெருக்கடி நடவடிக்கை மற்றும் தயார்நிலை மையம் (சிபிஆர்சி) டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. கோம்பாக் மாவட்டத்தில் மொத்தம் 89 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே வேளையில், பெட்டாலிங் மாவட்டத்தில் 51 சம்பவங்களும் மற்றும் உலு லங்காட் மாவட்டத்தில் 45 சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது என்றும் அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, கோலா லம்பூர், ஜொகூர் மற்றும் சரவாக் மாநிலங்களில் ஏழு பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்த பகுதிகளில் 41 சம்பவங்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் டிவிட்டரில் சிபிஆர்சி கூறியுள்ளது.