புத்ராஜெயா, மே 5:
நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபி) கீழ் இரவு 10 மணிக்குப் பிறகு அல்லது மாவட்ட எல்லைகள் தாண்டிய நகர்வுகளில் தடைகள் எதுவும் இருக்காது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“தற்போதைய நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் படி, மாவட்ட எல்லைகளுக்குள்ளான பயணங்களுக்கு நேர வரம்பு இல்லை.புதிய விதிகளின் கீழ், முன்பு போல் வரம்பு இல்லை” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நிபந்தனைகளுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நேற்று நடைமுறைக்கு வந்த பின்னர் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் சப்ரி பதிலளித்தார்.