Dato’ Seri Amirudin Shari merasmikan Pejabat Ahli Majlis Zon 5 dan Pejabat Jawatankuasa Penduduk Zon 5 di Dewan Komuniti Majlis Perbandaran Ampang Jaya (MPAJ) Bukit Antarabangsa, semalam.
PBTSELANGOR

மந்திரி பெசார், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினரின் அலுவலகத்தை திறந்து வைத்தார் !!!

புக்கிட் அந்தாராபங்சாவில் அமைந்துள்ள சமுக மண்டபத்தில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக (எம்பிஏஜே) உறுப்பினரின் (பிரிவு 5) நடவடிக்கை அலுவலகத்தை இன்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். இந்த அலுவலகம் எம்பிஏஜே உறுப்பினர் மற்றும் பொது மக்கள் சந்தித்து தங்களின் தொகுதி பிரச்சினைகளை தீர்க்க வழி வகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

” நான் தொடர்ந்து பொது மக்களின் புகார்கள் மற்றும் இந்த பகுதியின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கருத்துகளை கேட்டறிந்தேன்,” என்று அமிருடின் ஷாரி தனதுமுகநூலில் கூறினார்.

 

இதனிடையே, எம்பிஏஜே உறுப்பினர் சுஸானா ஷாருடின் கூறுகையில், இந்த அலுவலகம் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவித்தார்.


Pengarang :