NATIONALRENCANA PILIHAN

ஜூலை 1 தொடங்கி திரையரங்குகள் திறக்கப்படும்- இஸ்மாயில் சப்ரி

ஷா ஆலம், ஜூன் 22:

எதிர் வரும் ஜூலை 1 முதல் திரையரங்குகள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை நிகழ்ச்சிகள் செயல் பட அனுமதி அளிக்கப்படுகிறது என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். மூடப்பட்ட அரங்குகளில் 250 வருகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

” ஆனாலும், திரையரங்குகளின் அளவை பொறுத்தது. சீரான செயலாக்க நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும்,” என்று இன்று புத்ராஜெயா வில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.


Pengarang :