NI
SELANGOR

கோல சிலாங்கூர் வட்டார மக்களுக்கு இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், அக் 5- கடந்த மாதம் 20 முதல் 26 ஆம் தேதி வரை சபா மாநிலம் சென்று வந்த கோல சிலாங்கூர் வட்டார மக்களுக்கு இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பரிசோதனை இன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கோல சிலாங்கூர் டேவான் பண்டார் பாருவில் நடைபெறுவதாக கோவிட்-19 தடுப்பு பணிக் குழு பிரசுரங்கள் வழி தெரிவித்துள்ளது.

இந்த சோதனைக்கு வருவோர் சபாவுக்கு சென்று வந்ததற்கான அடையாளமாக விமான டிக்கெட்டையும் கோல சிலாங்கூரில் வசிப்பதற்கு ஆதாரமாக அடையாளக் கார்டையும் காட்ட வேண்டும். இது தவிர சிலாங்கூரில் வசிப்பதை நிரூபிக்கும் வகையில் மின்சார, குடிநீர் கட்டண பில்களையும் உடன் கொண்டு வர வேண்டும்.


Pengarang :