ஷா ஆலம், நவ 18- டீம் சிலாங்கூர் அமைப்பின் ஏற்பாட்டில் துங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் சுவாசக் கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இங்குள்ள இரு இரவுச் சந்தைகளில் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு 500 சுவாசக் கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக அவ்வமைப்பின் அதிகாரி வான் முகமது அலிப் ரய்மி முகமது மர்சுக்கி தெரிவித்தார்.
பொதுமக்கள் குறிப்பாக ஜனநடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு வருகை புரிவோர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
இந்நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு மேலும் அதிகமான பகுதிகளில் சுவாசக் கவசங்களை விநியோகம் செய்வதற்கான நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.