மேரு கிள்ளான் டிச 3;- கிள்ளான் மேருவிலுள்ள பொது மண்டபத்தில் சிலாங்கூர் செல்கேர் மையத்தின் வழி மேற்கொள்ளப்பட்ட கோவிட் 19 நோய் தொற்று சோதனைக்கு மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமாட் பாஹுரூல்ரசி முகமாட் மொக்தார் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தச் சோதனைக்கு ஸ்டாண்டர்ட் எ 200 எஸ்டி பையோசென்ஸர் வகை சோதனை கருவி பயன்படுத்தப் பட்டது. இவ்வகைக் கருவி சுமார் 30 நிமிடங்களில் ஒருவருக்கு நோய்த்தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த உதவியாகவுள்ளதாகக் கூறினார் சிலாங்கூர் செல்கேர் தலைமை நிர்வாகி மாட்ஷிர் இப்ராஹிம்.
இந்த சோதனைக்கு பொதுமக்கள் வழங்கிய ஆதரவு போற்றத்தக்கதாக இருந்ததாக இந்நிகழ்வு ஒருங்கிணைப்பாளரான முகமது அஸ்பிசாம் கூறினார் காலை 7.00 மணி முதல் அங்கு கூடத்தொடங்கிய பொதுமக்கள், அவர்களின் கைபேசிகளில் உள்ள (QR ) க்யூ ஆர் கோட் மூலம் அவர்களை இந்தச் சோதனைக்குப் பதிந்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
|
|