PBTSELANGOR

கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத்திற்கு 18 உறுப்பினர்கள் நியமனம்- இந்திய சமூகத்திற்கு 4 பிரதிநிதிகள்

ஷா ஆலம், ஜன 9- கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் 2021-2022 தவணைக்கு 18 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் இந்திய பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டி ராஜசேகரன், வி.லணுகா, வி.அழகேந்திரன் மற்றும் என்.வி. புஷ்பா ஆகியோரே அந்த நான்கு இந்திய பிரதிநிதிகளாவர். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த 18 உறுப்பினர்களும் பொதுமக்களுக்கும் மாவட்ட மன்றத்திற்கும் இடையே தொடர்புப் பாலமாக செயல்படுவார்கள் என்று மாவட்ட மன்றத் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.

உயர்நெறி, ஆற்றல் மற்றும் பரிவுத் தன்மையை அடித்தளமாக கொண்ட கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் மாண்பை மேன்மையுறச் செய்வதில் புதிதாக நியமனம் பெற்றுள்ள இந்த உறுப்பினர்கள் உரிய பங்கினை ஆற்றுவார்கள் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அனைத்து உறுப்பினர்களும் தங்களின் பொறுப்பை முறையாகவும் திறமையாகவும் ஆற்றுவதை உறுதி செய்வதற்காக முதன்மை தர குறியீட்டு  முறையை தாங்கள் அமலாக்கம் செய்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

மாவட்ட மன்றக் கூட்டங்கள், சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது மற்றும் பொதுமக்களின் குறைகளைக் களைவது போன்ற அம்சங்களில் அவர்களில் செயல் திறன் மதிப்பீடு செய்யப்படும் என்றார் அவர்.

ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவியேற்புச் சடங்கு மாவட்ட மன்ற தலைமையகத்தின் மெலாவத்தி மாநாட்டு அறையில் நேற்று நடைபெற்றது.


Pengarang :