ECONOMYPBTSELANGOR

சிலாங்கூரின் பல இடங்களில் இன்று தொடங்கி கோவிட்-19 பரிசோதனை இயக்கம்

ஷா ஆலம், பிப் 17- சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  இன்று தொடங்கி கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

இங்குள்ள செக்சன் 19 எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் கோவிட்-19 பரிசோதனை இயக்கம் இன்று நடைபெறும் வேளையில் நாளை வியாழக்கிழமை பண்டமாரான் ஜெயா பல்நோக்கு மண்டபத்தில் இப்பரிசோதனை நடைபெறும் என்று மந்திரி புசாரின் பத்திரிகை செயலகம் கூறியது.

இந்த பரிசோதனை இயக்கம் காலை 9.00. மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வருகையாளர்கள் முன்கூட்டியே http://screening.selangkah.my எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தின் இதர இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை இயக்கங்கள் தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடும் என்று அந்த அறிக்கை கூறியது.

தங்கள் பகுதியில் நடைபெறும் கோவிட்-19 பரிசோதனையில் பங்கேற்று பயன்பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


Pengarang :