ஷா ஆலம், மார்ச் 6- கித்தா சிலாங்கூர் சுற்றுப் பயணம் வாயிலாக மாநில மக்களைச் சந்திக்கும் பாரம்பரியத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்க விருக்கிறார்.
இந்த பயணத்தின் முதல் கட்டமாக தாம் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சொன்னார்.
கித்தா சிலாங்கூர் பயணத்திட்டத்தின் முதல் கட்டமாக அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள லெம்பா ஜெயா சட்டமன்றத் தொகுதிக்கு இன்றும் புக்கிட் அந்தாராபங்சா தொகுதிக்கு நாளையும் வருகை புரியவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இப்பயணத்தையொட்டி நடைபெறவிருக்கும் நிகழ்வுகளில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்..