ECONOMYNATIONALSAINS & INOVASI

கோவிட்-19 தடுப்பூசி பெற்றவர்கள் பட்டியலில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடம்

ஷா ஆலம், மார்ச் 16- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பட்டியலில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது. நேற்று வரை இம்மாநிலத்தில் 36,163 பேருக்கு அந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சிலாங்கூருக்கு அடுத்து பேராக் மாநிலமும் (33,036 பேர்) சரவா மாநிலமும் (31,527 பேர்) உள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 301,699 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக அங்கீகார உத்தரவாத சிறப்புச் செயல்குழு டிவிட்டர் வழி தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் 28,244 பேருக்கும் சபாவில் 26,446 பேருக்கும் பகாங்கில் 25,325 பேருக்கும் ஜோகூரில் 22,965 பேருக்கும் கெடாவில் 18, 859 பேருக்கும் பினாங்கில் 16,758 பேருக்கும் அந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கிளந்தான் (15,442 பேர்), திரங்கானு (14,137) பேர், நெகிரி செம்பிலான் (12,209 பேர், மலாக்கா (7,963 பேர்), பெர்லிஸ் (6,807 பேர்), புத்ரா ஜெயா (3,827 பேர்), லபுவான் (2,342 பேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


Pengarang :