ஷா ஆலம், மார்ச் 16– ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஹரிஸ் காசிம் சிலாங்கூர் மாநில நிதி அதிகாரிகயாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் அலுவலகம் தனது முகநூல் வாயிலாக உறுதிப்படுத்தியது.‘
சிலாங்கூர் மாநில நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ஹரிஸ் காசிமுக்கு மாநில அரசு நிர்வாகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று அந்த முகநூலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 3ஆம் தேதி மாநில அரசு செயலாளராக நியமனம் பெற்ற டத்தோ நோர் அஸ்மி டிரோனின் இடத்தை டத்தோ ஹரிஸ் நிரப்புகிறார்.
சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய அதிகாரி மற்றும் உலு லங்காட் மாவட்ட அதிகாரி ஆகிய பதவிகளை டத்தோ ஹரிஸ் காசிம் முன்பு வகித்துள்ளார்.