ஷா ஆலம், மே 8– இன்று காஜாங் மற்றும் செமினியில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு பெறுமாறு தொகுதி மக்களை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
டேவான் செம்பாக்கா சவுஜானா இம்பியான் மற்றும் பண்டார் ரிஞ்சிங் டேவான் ஓராங் ராமாயில் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த பரிசோதனை இயக்கம் நடைபெறும் என்று அவர் சொன்னார்.
காஜாங் மற்றும் செமினி தொகுதிகளில் உள்ளவர்கள் இந்த பரிசோதனை இயக்கத்தில் தவறாது பங்கு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பொதுமக்கள் http://screening.selangkah.my எனும் அகப்பக்கம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேடுதல், கண்டுபிடித்தல், சோதித்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய நான்கு கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
தினசரி இரு சட்டமன்றத் தொகுதிகள் என்ற அடிப்படையில் இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநில மக்களுக்கு இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை நடத்தவுள்ளோம் என்றார் அவர்.
தொடக்கமாக இன்று செமினி மற்றும் காஜாங் தொகுதிகளில் இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், நானை 9ஆம் தேதி சுங்கை ராமால் மற்றும் பலாக்கோங் தொகுதிகளில் நடைபெறும் என்றார்.