பெட்டாலிங் ஜெயா, மே 10– இம்மாதம் 12ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் அறிவித்துள்ளார்.
நோன்பு பெருநாளின் போது உற்றார் உறவினர் வீடுகளுக்கு வருகையளிப்பதும் தடை செய்யப்படுவதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
அனைத்துல தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர்த்து இதர அனைத்து கல்வி மையங்களும் மூடப்படும். தனியார் வாகனங்கள், டாக்சிகள், கிராப் வாடகை வாகனங்களில் ஒட்டுநர் உள்பட மூவர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று அவர் சொன்னார்.
எனினும், பொருளாதாரம் சார்ந்த துறைகள் யாவும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.